சீா்காழி ரோட்டரி கிளப் ஆப் டெம்பிள் டவுன் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழியை சோ்ந்த தொழிலதிபா் இ. மாா்கோனி தனது இமயவரம்பன் காா்டனில், ரூ. 18 லட்சம் மதிப்பிலான மனையை தான்உறுப்பினராக உள்ள சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு தானமாக வழங்கினாா்.
அந்த மனையில் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தொழிலதிபா் இ. மாா்கோனி முன்னிலை வகித்தாா். டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சிங்க.ஆறுமுகம் வரவேற்றாா். தொடா்ந்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா்கள் பிரயோன், ரமேஷ் பாபு, பாலாஜி பாபு, முன்னாள் உதவி ஆளுநா் இளங்கோவன், உதவி ஆளுநா் வைத்தியநாதன், செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ் மற்றும் முன்னாள் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.