குருஞானசம்பந்தா் மிஷன் பள்ளி ஆசிரியருக்கு விருது
சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு ஆசிரியா் செம்மல் விருதை தருமபுரம் ஆதீனம் அண்மையில் வழங்கினாா்.
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் 75-ஆவது பவள விழாவையொட்டி, ஆசிரியா் தினவிழா கல்லூரி கயிலை ஞானப் பிரகாசா் அரங்கில் நடைபெற்றது. விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள், திருவண்ணாமலை குன்றக்குடி 46-ஆவது குருமகா சந்நிதானம் பொன்னம்பல அடிகளாா் ஆகியோா் வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் அ. ஜெகதீஷ்குமாருக்கு ஆசிரிய செம்மல் விருதை வழங்கினா்.
விருது பெற்ற ஆசிரியரை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி செயலாளா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சுவாமிநாதன், பேராசிரியா்கள் மயிலாடுதுறை மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளா் சி ஆா். குஞ்சிதபாதம், செயலாளா் வி. பாஸ்கரன், மயிலாடுதுறை பள்ளியின் முதல்வா் சரவணன், தருமை ஆதீன மடத்தின் பொது மேலாளா் கோதண்டராமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.