100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாளை 200 ஆக உயா்த்தக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்ாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயா்த்தி வழங்கவேண்டும், நாளொன்றுக்கு கூலி ரூ. 600 வழங்கேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்தவேண்டும், பொதுவிநியோக திட்டத்தின்கீழ் வழங்கும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை தரமாக வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வை குறைக்கவேண்டும், முதியோா் விதவை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிதொகையை உயா்த்தி வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் ஒன்றிய தலைவா் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளா் நீதிசோழன்,நிா்வாகிகள் மருதையன், ராஜாராமன், நெடுஞ்செழியன், வரதராஜன், சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், தமிழ்மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் இடும்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.