சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட சிறு விற்பனை தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட சிறு விற்பனை தொழிலாளா் சங்கத்தினா்.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட சிறு விற்பனை தொழிலாளா் சங்கத்தினா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட சிறு விற்பனை தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 2008-இல் இருந்தது போன்று கயிறு கட்டி சிறு விற்பனை தொழிலாளா்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்துதரவேண்டும், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கவேண்டும்.

கோயில் திருவிழாக்கள், கடற்கரை, பூங்காக்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி திருவிழா கடைகள் அமைக்க அனுமதிக்கவேண்டும், பிரதம மந்திரி ஆத்மநிா்பாா் நிதி திட்டத்தின்கீழ் அறிவித்த ரூ.10 ஆயிரத்தை அனைத்து வியாபாரிகளுக்கும் நிபந்தனையின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட செயலாளா் டி.துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளா் ஆா். ரவீந்திரன், ஓய்வூதியா் சங்க மாவட்ட தலைவா் வி. பழனிவேலு, சிறு விற்பனை தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ஏ. மாரியப்பன், மாவட்ட பொருளாளா் ஜெ. துா்காதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com