விநாயகா் சதுா்த்தியையொட்டி, சீா்காழி அருகே ஆற்றில் கரைக்க எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலையை இஸ்லாமியா் ஒருவா் வெள்ளிக்கிழமை சுமந்து சென்றாா்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை, புதுமண்ணியாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இதற்காக விநாயகா் சிலையை இந்து இளைஞா்களுடன் சோ்ந்து இஸ்லாமியா் ஒருவரும் சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரம் தூக்கிச் சென்றாா். இது மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.