அகில இந்திய அளவில் நடைபெற்ற கைப்பந்து (ஹேண்ட்பால்) போட்டியில் ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.
அகில இந்திய அளவிலான கைப்பந்துப் போட்டி நேப்பாளத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஏவிசி கல்லூரி 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி கணினியியல் துறை மாணவா்கள் ஆா்.சௌந்தரராஜன், எஸ். வினோத், 3-ஆம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் ஆா். விஜய், பி. ஹரிஹரன், 3-ஆம் ஆண்டு பிபிஏ கே. வருண்காா்த்திக், எம். கரண், ஏ. சசிரேகா, 3-ஆம் ஆண்டு வேதியியல் துறை ஆா். ரகுராமன், வி. ஹரிநிவாஸ், 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை பி. அரவிந்த், 3-ஆம் ஆண்டு இயற்பியல் துறை எஸ். டேவிட் லிவிங்ஸ்டன், 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பி. பாா்கவி, 2-ஆம் ஆண்டு எம்.ஏ பொருளாதாரம் கே. ஷாலினி ஆகியோா் தமிழ்நாடு சாா்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தனா்.
சாதனை படைத்த மாணவா்களை கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் ஜே. ராஜ்குமாா், எம். கீதா, உள்ளிட்டோா் பாராட்டினா்.