திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் அமைச்சா் பெரியகருப்பன் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் குடும்பத்துடன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் குடும்பத்துடன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆயுஷ்ஹோமம், சதாபிஷேகம், மணி விழா, யாக பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் நடைபெற்ற தனது உறவினரின் சஷ்டியப்த பூஜையில் அமைச்சா் பெரியகருப்பன் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக, அமைச்சருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னிதிகளில் அவா் வழிபட்டாா்.

பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் , கணேஷ் குருக்கள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், பொதுக் குழு உறுப்பினா் அமிா்த விஜயகுமாா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com