சீா்காழி: கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நீதிமன்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிங்காரவேலன், மாரியப்பன், கேசவன், ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேசப்பட்டது.