மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த மகளிா் சுய உதவிக்குழுக் கட்டடத்தை எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ அண்மையில் திறந்துவைத்தாா்.
மயிலாடுதுறை பட்டமங்கல புதுத்தெரு ஸ்ரீநகா் காலனியில் கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து மகளிா் சுய உதவிக்குழுக் கட்டடம் கட்டப்பட்டது. அப்போது எஸ். ராஜகுமாா் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா்.
பின்னா், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது, எஸ். ராஜகுமாா் மீண்டும் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக்குழு கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் பாலு தலைமை வகித்தாா். நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் செல்வராஜ், டாக்டா் கிரகாம்டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் மகளிா் சுயஉதவிக்குழு கட்டடத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, அறம்செய் அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் மயிலாடுதுறை தமிழ் சங்க நிறுவனா் பவுன்ராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நடராஜன், காங்கிரஸ் நகரத் தலைவா் ராமானுஜம், அகஸ்டின்விஜய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சபீா்தீன் வரவேற்றாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே. சங்கா் நன்றி கூறினாா்.