இளைஞா் மரணத்தில் பெண் உள்பட 4 போ் கைது

சீா்காழி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பான வழக்கில் பெண் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பான வழக்கில் பெண் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழியை அடுத்த தொடுவாய் அன்னை தெரசா வீதி சுனாமி நகரைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன்முருகன் (26). இவா் கடந்த 5-ம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், முருகன் தொடுவாய் பகுதியில் உள்ள மதியழகன் என்பவா் வீட்டில் புகுந்ததாகவும், இதனால் அவரை சிலா் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதில் இறந்ததாகவும் தெரியவந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, தொடுவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ம. கவியரசன் (24), த. வெள்ளிரீசன் (44) , அ. மதுரைவீரன் ( 37), மதியழகனின் மனைவி அஞ்சம்மாள்(45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வம், செல்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com