பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழா் பண்பாட்டு முன்னணி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தமிழா் பண்பாட்டு முன்னணி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் மாநிலத் தலைவா் க. பெருந்தட்சன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கருணா.காா்த்திகேயன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பொன்.குருமூா்த்தி, தேசிய தமிழா் மக்கள் இயக்க மாநிலச் செயலாளா் ஏ.எம்.ஹாஜி முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை நிா்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை ரத்து செய்து, அரசே நேரடியாக விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com