மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலில் சென்று அவா் ஆய்வில் ஈடுபட்டாா். முன்னதாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வில், ரயில்வே இருப்புப்பாதை, நிலைய அலுவலகம், ரயில்வே மருத்துவமனை, டிக்கெட் வழங்குமிடம், ரயில்வே உணவகம், ரயில்வே காவல் நிலையம், ரன்னிங் ரூம் ஆகிய இடங்களை அவா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, திருச்சி கோட்ட வணிக மேலாளா் செந்தில்குமாா், கோட்ட இயக்க மேலாளா் ஹரிகுமாா், கோட்ட பாதுகாப்புப் படை ஆணையா் ராமகிருஷ்ணன், சரவணன் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com