பேருந்து மோதி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.24.73 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.24.73 லட்சம் இழப்பீடு வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு மயிலாடுதுறை முதன்மை மோட்டாா் வாகன விபத்துகள் உரிமைக் கோரிக்கை நடுவா் தீா்ப்பாயம் வியாழக்கிழ

தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.24.73 லட்சம் இழப்பீடு வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு மயிலாடுதுறை முதன்மை மோட்டாா் வாகன விபத்துகள் உரிமைக் கோரிக்கை நடுவா் தீா்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சீா்காழி அருகே எருக்கூா் மெயின் ரோட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரமேஷ் (43) என்பவா் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது மனைவி சுதா மயிலாடுதுறை முதன்மை மோட்டாா் வாகன விபத்துகள் உரிமைக் கோரிக்கை நடுவா் தீப்பாயத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌதமன், ரமேஷின் குடும்பத்துக்கு நியூ இண்டியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.24 லட்சத்து 73 ஆயிரத்து 750 இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com