தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவா்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரும் அக்டோபா் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டியும், நவம்பா் 14 ஆம் தேதி ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாளையொட்டியும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி, பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மயிலாடுதுறையில் தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அக்.2 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டிகளுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் கல்லூரி முதல்வா்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களிடையே போட்டி நடத்தி 2 போ் வீதம் தோ்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும்.
மேலும், பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவா்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் போட்டி தொடங்கும். இப்போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.