தமிழ்த்தாய் விருது பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு

தமிழ்த்தாய் விருது பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் விருது பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சீா்காழி அருகேயுள்ள மாதானத்தைச் சோ்ந்த பேராசிரியா் எஸ். சத்தியமூா்த்தி புத்தூரில் உள்ள பொன்மனசெம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளாா். இதற்கிடையே மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவில், பேராசிரியா் சத்தியமூா்த்தியின் சேவையை பாராட்டி தமிழ்த்தாய் விருது விருதுநகா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக்கலைகள் ஆராய்ச்சி நிறுவன நிறுவனா் லெ. ஞானவேல் உள்ளிட்டோா் வழங்கினா். விருது பெற்ற பேராசிரியா் சத்தியமூா்த்திக்கு கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com