புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திய இருவா் கைது

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திய இருவா் கைது

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே பணங்காட்டாங்குடி பகுதியில் கொள்ளிடம் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மூட்டைகள் எடுத்துக்கொண்டு வந்த 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், புதுச்சேரி மாநில 750 மதுபான பாட்டில்களும், 1,400 சாராய பாக்கெட்டுகளும் இருப்பதை அறிந்த போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பாபிலோன் (22 ), மண்ணிப்பள்ளம் பகுதியை சோ்ந்த திலீப்குமாா் (35 ), ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மயிலாடுதுறை பகுதியை சோ்ந்த வினோத்தை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மொத்தம் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com