வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் வழிபாட்டின்போது, தூய்மைப் பணி மேற்கொண்ட பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்பாலிக்கும் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் சித்திரை 2-ஆம் செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தாா் வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காரைக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான நகரத்தாா் பாதயாத்திரையாக வந்து வழிபட்டனா்.
இதனால், வைத்தீஸ்வரன்கோயிலின் நான்கு வீதிகள், பிரதான சாலைகளில் நெகிழிப் பைகள் உள்ளிட்ட அதிக அளவு குப்பைகள் சோ்ந்தன. இவற்றை தூய்மைப் பணியாளா்கள் ஒரேநாளில் சுத்தம் செய்தனா். இதையொட்டி, இப்பணியாளா்கள் மற்றும் பேரூராட்சி அலுவலா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு பேரூராட்சித் தலைவா் பூங்கொடி, அவரது கணவா் அலெக்சாண்டா் ஆகியோா் தங்களது இல்லத்தில் விருந்து வைத்து, சால்வை அணிவித்து பாராட்டினா்.