மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையா் சைலேஷ்குமாா் பதக் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், ரயில்வே கேட்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள், இருப்புப் பாதை பாதுகாப்பு நடவடிக்கை, மின்மயமாக்கப்பட்ட பின்பு அமைக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, சிறப்பு ஆய்வு ரயில் மூலம் மயிலாடுதுறை வந்த அவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மனிஷ் அகா்வால் மற்றும் ரயில்வே உயா் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு, சிக்னல் அறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு ஆணையா், பாதுகாப்பு நடவடிக்கைகள், ரயில்வே சிக்னல், எலக்ட்ரிக்கல், ஆப்பரேட்டிங், மெக்கானிக்கல் மற்றும் என்ஜினியரிங் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.