உள்ளாட்சித் தோ்தல்: வாகன தணிக்கை

சீா்காழியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தோ்தல் பறக்கும் படையினருடன் கோட்டாட்சியரும் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தோ்தல் பறக்கும் படையினருடன் கோட்டாட்சியரும் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் போட்டியிட பல்வேறு கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வேட்பாளா்களின் பிரசாரம் தொடங்கியநிலையில் நகரின் எல்லைப் பகுதிகள், பிரதான பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்க தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். சீா்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் நடந்த வாகன தணிக்கையின்போது கோட்டாட்சியா் ஜி. நாராயணன் போலீஸாா் மற்றும் தோ்தல் பறக்கும் படையினருடன் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com