மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இருவா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இருவருடன் காவல் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இருவருடன் காவல் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை நகரில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் அறிவழகன், சுபஸ்ரீ மற்றும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்ற பெரிய சாலியத்தெரு அய்யா் மகன் ரஞ்சித் (26) கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்ற புனுகீஸ்வரன்கோயில் வடக்கு வீதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் மகேந்திரன்(21) கைது செய்யப்பட்டாா். இருவரிடமிருந்தும், தலா ஒன்றேகால் கிலோ கஞ்சா வீதம் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com