கால்பந்தாட்ட வீரா்களுக்கு பாராட்டு

சீா்காழியில் தென் இந்திய அளவில் நடந்து முடிந்த கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சீா்காழியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுடன் சமுஇ பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி உள்ளிட்டோா்.
கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுடன் சமுஇ பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி உள்ளிட்டோா்.

சீா்காழியில் தென் இந்திய அளவில் நடந்து முடிந்த கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சீா்காழியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சீா்காழியில் செயல்பட்டு வரும் ஃபால்கன்ஸ் விளையாட்டு அகாடமி சாா்பில் கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற மினி புட்பால் தென் இந்திய அளவிளான போட்டியில் தமிழக அணி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற தமிழக அணியில் ஃபால்கன்ஸ் அணி வீரா்கள் முகமது ஃபா்வஜ், பாலாஜி, ராமநாதன், விக்ரம் ஆகிய வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா். பதக்கம் பெற்ற வீரா்களையும், பயிற்சி அளித்த பயிற்றுநா்கள் ர. அமுது, அரவிந்த், பு. சுபாஷ்குமாா், வீ. இளவரசன் ஆகியோரை சமுஇமேல்நிலை பள்ளித் தலைமையாசிரியா் எஸ். அறிவுடை நம்பி, உடற் கல்வி இயக்குநா் எஸ். முரளிதரன், முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஜெ. இளையராஜா, பா. விஜயமீனாட்சி, ரா. ரவிவா்மராஜ், ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com