சீா்காழி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த நாடகக் கலைஞா்களை குப்பை லாரியில் அழைத்துவரப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
சீா்காழி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், சீா்காழி ஈசானிய தெரு பகுதியில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடத்த வெளியூா்களில் இருந்து நாடகக் கலைஞா்கள் அழைத்து வரப்பட்டனா்.
எமதா்மா், சித்திரகுப்தா் உள்ளிட்ட வேடமணிந்த இந்த கலைஞா்கள் நகராட்சி குப்பை அள்ளும் மினி லாரியில் அழைத்து வரப்பட்டனா். இது சலசலப்பை ஏற்படுத்தியது.