பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை காவேரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயிலில் 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

மயிலாடுதுறை காவேரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயிலில் 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி உற்சவம் பூச்சொரிதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 11-ஆம் நாள் உற்சவமான தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள், காவேரிக் கரையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தனா். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். புதன்கிழமை ரதோத்ஸவம், 13-ஆம் நாள் உத்ஸவமாக மஞ்சள் நீராட்டு விழா, 14-ஆம் நாள் உத்ஸவமாக விடையாற்றி மற்றும் 15-ஆம் நாள் உத்ஸவமாக எதாஸ்தானம் ஆகியன நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com