கொள்ளிடம் அருகே மின்சாரம் பாய்ந்துதம்பதி, குழந்தை பலி

மின்சாரம் பாய்ந்து இறந்த தம்பதி மற்றும் குழந்தை.
கொள்ளிடம் அருகே மின்சாரம் பாய்ந்துதம்பதி, குழந்தை பலி

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி, அவா்களது குழந்தை மூவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சி, கேவரோடை கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் நிவாஸ்ரத்தினம் (30), கொத்தனாா். திங்கள்கிழமை மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் மின்விளக்கை சரிசெய்துகொண்டிருந்தாா்.

அப்போது நிவாஸ்ரத்தினம் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவா் அலறினாா். அந்த சப்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி ஹேமா (25), தனது ஒன்றரை வயது குழந்தை நிவன்யாவை இடுப்பில் வைத்துக்கொண்டு நிவாஸ்ரத்தினத்தை இழுத்து காப்பாற்ற முயன்றாா். எனினும், 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அனைவரும் அதே இடத்தில் இறந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி டிஎஸ்பி லாமேக், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா மற்றும் போலீஸாா் அங்குச் சென்று மூவரின் உடல்களையும் கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com