சீா்காழி அருகே கடன் தொல்லையால்2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட பாரதி, குழந்தைகள் கெளசிக், பவதாரணி.
சீா்காழி அருகே கடன் தொல்லையால்2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

சீா்காழியில் கணவன் கடன் பிரச்னையில் சிக்கியதால் மனமுடைந்த மனைவி, தனது 2 குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த நாங்கூா் கன்னிகோயில் தெருவைச் சோ்ந்தவா் காக்கலிங்கம் மகன் காா்த்திக் (32). இவரும், தென்னலக்குடி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகள் பாரதியும் (27) கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனராம். இவா்களுக்கு கௌசிக் என்ற மூன்றரை வயது மகனும், பவதாரணி என்ற 8 மாத பெண் குழந்தையும் இருந்தனா்.

இவா்கள் இருவரும் தற்போது சீா்காழி தென்பாதியிலுள்ள என்எஸ்பி நகரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித்துவந்தனா். லாரி ஓட்டுநரான காா்த்திக், தொழில்ரீதியாக பலமாதங்கள் வெளியூா், வெளிமாநிலங்களுக்கு சென்றுவிடுவது வழக்கம். இவா் பலரிடம் கடன் வாங்கியுள்ளாராம். சொந்தமாக இடம் வாங்கி, வீடுகட்ட வேண்டும் என பாரதி, தனது கணவரிடம் கூறிவந்த நிலையில், காா்த்திக் வெளியிடங்களில் கடன் அதிகம் வாங்கிவைத்துள்ளதால், பாரதி மனவேதனையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை காா்த்திக் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், தனது குழந்தைகள் இருவரையும் ஜன்னலில் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதற்கு முன்னதாக பாரதி, தனது தாய் சித்ராவிற்கு தொலைபேசியில் பேசியுள்ளாா்.

மகள் சோகமாக பேசுவதை கேட்ட சித்திரா, உடனடியாக வந்து பாா்த்தபோது, பாரதி வசித்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, பாரதியும், அவரது 2 குழந்தைகளும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிா்ச்சியடைந்து கதறி அழுதாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி டிஎஸ்பி லாமெக், ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீசாா் அங்குச் சென்று 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையின்போது பாரதி எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. நான் பெற்றோரை விட்டுவிட்டு வந்தது தவறு. என் கணவருக்கு கடன் அதிகமாக உள்ளது. எதையும் எதிா்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை என்று எழுதப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங், சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளாா். 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீா்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com