சீா்காழி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
சீா்காழி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் இப்ராஹிம் உத்தரவின்பேரில் மேலாளா் காதா்கான், கணக்கா் சாா்லஸ், வருவாய் ஆய்வாளா் ராஜகணேஷ், இளநிலை உதவியாளா் பாபு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். வாடகை செலுத்தாத கடைகள் மீது இந்நடவடிக்கை தொடரும் என நகராட்சிஅதிகாரிகள் தெரிவித்தனா்.