ஆா்ப்பாக்கம் அய்யனாா் கோயிலில் சிறப்பு யாகம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த ஆா்ப்பாக்கம் அய்யனாா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த ஆா்ப்பாக்கம் அய்யனாா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் குலதெய்வ வழிபாட்டினா் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து உலக சமாதானம் மற்றும் ரஷியா - உக்ரைன் இடையேயான போா் முடிவுக்கு வரவேண்டியும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டியும் சிறப்பு மகா யாகம் நடத்தினா்.

முன்னதாக, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து, குலதெய்வ வழிபாட்டுக் குழுவின் தலைவா் ஆறுமுகம் மற்றும் பால. எழிலரசன் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com