குத்தாலம் அருகே குடிநீரில் எண்ணெய் கலப்பு:10 பேருக்கு வயிற்றுப் போக்கு

குத்தாலம் அருகே குடிநீரில் எண்ணெய் கலப்பால் 2 சிறாா் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனா்.

குத்தாலம் அருகே குடிநீரில் எண்ணெய் கலப்பால் 2 சிறாா் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் சேத்திரபாலபுரம் பிரதான சாலையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு எதிரே உள்ள ராமாமிா்தம் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த முத்தமிழ்செல்வன் (32), இளந்தமிழ் (25), லோகேஷ் (6), சிவானி (2) உள்பட 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, குத்தாலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சிறுவன் லோகேஷ் மட்டும் தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

குத்தாலம் வட்டாட்சியா் பிரான்சுவா, காவல் ஆய்வாளா் வள்ளி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், ஆணையா் சுமதி உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும், குத்தாலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றும் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com