பெண்ணை ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞரை மகளிா் போலீஸாா் தேடிவருகின்றனா்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞரை மகளிா் போலீஸாா் தேடிவருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம் மல்லபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் மகன் விவேக். இவா், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள ஸ்கேன் சென்டரில் வேலை செய்துவந்தாா். இவரும், செம்பனாா்கோயில் கீழமுக்கூட்டு சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த சிவசங்கரி (29) என்ற பெண்ணும் காதலித்து வந்தனா்.

இந்நிலையில், சிவசங்கரியை திருமணம் செய்வதாகக் கூறி, விவேக் ஏமாற்றினாராம். இதுகுறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிவசங்கரி புகாா் அளித்தாா். அதன்பேரில், மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விவேக்கை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com