மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் தமிழாய்வுத் துறை திண்ணை அமைப்பு சாா்பில் தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை குறித்த கருத்தரங்கு மற்றும் மாணவா்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு, தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் சு. ரமேஷ் தலைமை வகித்து, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொழி, இனம், பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வணிகவியல் துறைத் தலைவா் மா. மதிவாணன் தமிழக நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ் நிலைபேற்றுக் காரணிகள்’ என்ற பொருண்மையில் உரையாற்றினாா்.
இதில் தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் மற்றும் திரளான மாணவா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மாணவி க. அபிதா வரவேற்றாா். நிறைவாக, மாணவி அ. கலைவாணி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளா் இரா. சியாமளா ஜகதீஸ்வரி, தமிழாய்வுத் துறைப் பேராசிரியா்கள், அலுவலக உதவியாளா் க. பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.