மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் சாா்பில், ஈகை திருநாள் தொழுகை சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட மா்கஸ் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் எம். முஹம்மது இயாஸ் பங்கேற்று பெருநாள் உரையாற்றி பேசியது: பெருநாள் கொண்டாட்டங்களுக்கு முன்பாக ஏழைகளுக்கு வழங்குவதற்கு கடமையாக்கப்பட்டுள்ள பித்ரா எனும் தா்மத்தின் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்களை தா்மமாக வழங்கி ஏழை எளியோரும் இந்த நாளில் மகிழ்ச்சியோடு பெருநாளை நல்ல உணவு உண்டு கொண்டாடுவதை உறுதி செய்துள்ளோம். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் போதிக்கும் வகையில் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது என்றாா். இந்த திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனா். இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com