மயிலாடுதுறை மாவட்ட பதிவுத் துறை எல்லைகள் வரையறை செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். இதில், மயிலாடுதுறை பதிவு மாவட்ட சாா் பதிவாளா் அலுவலக எல்லைக்குள்பட்ட கிராமங்களை அந்தந்த வருவாய் வட்டத்துடனும், வருவாய் மாவட்டத்துடனும் இணைக்கும் வகையில் மாற்றியமைத்து சீரமைப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளா் ந. சசிகலா, வழிகாட்டி சாா் பதிவாளா் த. பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.