மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டவா் கைது

சீா்காழி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழியை அடுத்த கற்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகலா. இவா், சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரை பாா்க்க ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் அபிமணிக்கும் (20), அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த புனிதா(40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதில் புனிதாவை அபிமணி தாக்கினாராம். இதில் காயமடைந்த புனிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து, அபிமணியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com