செவிலியா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த செவிலியா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த செவிலியா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி அருகேயுள்ள காரைமேடு பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவா், தனது மனைவி பிரனீபாவை பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் கடந்த மே 9-ஆம் தேதி அனுமதித்தாா்.

குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும், 2 நாளில் சுகப் பிரசவம் ஆகும் என்று மருத்துவமனையில் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பிரனீபாவுக்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பணியில் இருந்த செவிலியா்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கவேண்டும், இல்லையென்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை உயிரிழந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் குழந்தையின் உயிரிழப்புக்கு செவிலியா்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் மோகன்குமாா் ஆகியோா் தலைமையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு, உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், காவல் கண்காணிப்பாளா்கள் வசந்தராஜ், லாமேக் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், நாகையிலிருந்து மருத்துவக் குழுவினா் மூலம் மருத்துவ சிகிச்சை குறித்து விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com