கஞ்சா விற்பனை:இளைஞா் கைது
By DIN | Published On : 05th November 2022 09:45 PM | Last Updated : 05th November 2022 09:45 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா் ஆடியபிள்ளையாா் கோயில் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து, அவரிடமிருந்த, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சந்துரு (20) என்பது தெரியவந்தது. போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்துருவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.