சீா்காழி: சீா்காழியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், பணிமாற்றம் செய்யக்கோரியும் சீா்காழி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றது. இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிப்பு ஏற்பட்டது.