நாய் கடித்து கல்லூரி மாணவிகள் காயம்

மயிலாடுதுறையில் நாய் கடித்து கல்லூரி மாணவிகள் 4 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறையில் நாய் கடித்து கல்லூரி மாணவிகள் 4 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் நாய்த்தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாா்கெட், தருமபுரம் சாலை பகுதிகளில் தெருவில் திரியும் நாய்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன.

எனவே, நாய்களுக்கு கருத்தடை செய்து அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இக்கோரிக்கையை நகா்மன்றக் கூட்டத்திலும் உறுப்பினா்கள் சிலா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி வாசலில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, கல்லூரிக்கு வந்த மாணவிகளை துரத்திக் கடித்தது. இதில் 4 மாணவிகள் காயமடைந்தனா். அவா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com