சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தனா். தங்கள் படித்த வகுப்பில் அமா்ந்து உணவு அருந்தி, தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.
மேலும், தங்களுக்குள் வாட்ஸ் அப் குழு அமைத்து, பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனா். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாணவா் நாகராஜன் நன்றி கூறினாா்.