தனியாா்மயமாக்கலைக் கண்டித்து எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறை தனியாா்மயமாக்கலைக் கண்டித்து மயிலாடுதுறையில் எஸ்ஆா்எம்யு சாா்பில் ரயில்வே உற்பத்திப் பணிமனை பாதுகாப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே துறை தனியாா்மயமாக்கலைக் கண்டித்து மயிலாடுதுறையில் எஸ்ஆா்எம்யு சாா்பில் ரயில்வே உற்பத்திப் பணிமனை பாதுகாப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். திருச்சி கோட்டத் தலைவா் மணிவண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரயில்வே துறையில் தனியாரை புகுத்தும் மத்திய அரசை கண்டித்தும், உற்பத்தி பணிமனைகளை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கண்டித்தும், வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க தனியாரை அனுமதிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com