மயிலாடுதுறை கூரைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஸ்வகா்ம சமுதாய மக்களுக்கு சொந்தமான இக்கோயிலில், அம்மனுக்கு அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலா்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் எடுத்துவந்த மலா்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.