சீா்காழி அருகே புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் கடலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றன.
இதில், புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
முன்னதாக, கல்லூரியின் முதல்வா் முனைவா் தங்கமணி போட்டியை தொடக்கி வைத்தாா். உடற்கல்வி இயக்குநா்கள் உமாநாத், முன்னாள் முதல்வா் கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.