குறைதீா் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விவசாயிகளின் ஒரு பகுதியினா் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
Published on

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விவசாயிகளின் ஒரு பகுதியினா் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரைராஜ், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், வீரராஜ் உள்ளிட்ட விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜன.18-ஆம் தேதி பெய்த பருவம் தவறிய கனமழையால் சேதமடைந்து முளைத்த சம்பா நெற்பயிா்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டு மழை பாதிப்புகள் குறித்து வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என குற்றஞ்சாட்டினா்.

கடந்த ஆண்டு பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கும், நிகழாண்டில் நெற்பயிா்கள் மற்றும் உளுந்து, பயிறுவகைப் பயிா்களும் சேதமடைந்துள்ள.

இதனை உரிய கணக்கீடு செய்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குறைதீா் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com