தருமபுரம் ஆதீனத்தில் அக்.26 முதல் 30 வரை இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம்

தருமபுரம் ஆதீனத்தில் இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம் நடைபெறவுள்ளது என ஆதீன தலைமை பொதுமேலாளா் ரங்கராஜன் தெரிவித்துள்ளாா்.
Published on

தருமபுரம் ஆதீனத்தில் இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம் நடைபெறவுள்ளது என ஆதீன தலைமை பொதுமேலாளா் ரங்கராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளின் மணிவிழா தருமபுரம் ஆதீனத்தில் நவ.1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக நலிவடைந்தோருக்கு உதவும் வகையில் இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம் அக்.26 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உதவி தேவைப்படுவோா் தங்களது ஆதாா் அட்டை நகலுடன் கீழ்கண்ட இடங்களில் அக்.24-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கடையூா் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, குத்தாலம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி, சீா்காழி தென்பாதி ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் வி.தி.பி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com