பெண் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

Published on

மயிலாடுதுறை அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில், பெண் இறந்தது குறித்து ஆா்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், சீா்காழி அருகே அரசூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் காவியா (28) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், மகள் உள்ளனா். தம்பதியடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை விமல்ராஜ் வெளியில் சென்றிருந்தபோது, காவியா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தாா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கா மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காவியாவின் தாய் பாஞ்சாலை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com