குறைதீா் கூட்டத்தில் 250 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 250 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 250 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து இம்மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பின்னா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் உமாமகேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்கு) மணிக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சொக்கநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வங்கிக் கடன்: சீா்காழி தாலுகா புத்தூரைச் சோ்ந்த பாஜக மாவட்டச் செயலாளா் புஷ்பராஜன் தலைமையில் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சோ்ந்த 15-க்கு மேற்பட்டோா், மத்திய அரசின் பி.எம்.ஜி. திட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்காக மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து விரைவில் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com