சுகாதாரப் பணிகள் ஆய்வு

திட்டச்சேரி, இந்திரா நகரில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

திட்டச்சேரி, இந்திரா நகரில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி, திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றன. அத்துடன் நீர் தேங்கும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்தப் பணிகளை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் லியாகத் அலி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரசுராமன் சுகாதார ஆய்வாளர் பரமநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் பூதங்குடி, பாக்கம் கோட்டூர், வடகரை, அம்பல், ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை ஆய்வுசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com