லாரி-பேருந்து மோதி விபத்து: 8 பேர் காயம்

நாகை அருகே லாரியும், பேருந்தும் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
Published on
Updated on
1 min read

நாகை அருகே லாரியும், பேருந்தும் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி, களியக்காவிளையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசுப் பேருந்து வேளாங்கண்ணிக்கு வந்தது. அதேபோல், காரைக்கால் துறைமுகத்திலிருந்து மரத்தூள் ஏற்றிக்கொண்டு கரூருக்கு லாரி ஒன்று சென்றது. சிக்கலை அடுத்த ராமர்மடம் என்ற இடத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 7 பேரும், லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமாரும் (45)  காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com