குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாப்பாத்தியம்மன், ஸ்ரீஏகாலியான், ஸ்ரீ அய்யனார் கோயில்களின் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அனுக்ஞை, தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவுற்று, கும்பாபிஷேக தினத்தன்று பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.