திருமருகல் அருகே அரசலாற்றில் மணல் எடுத்ததை தடுத்த வருவாய் ஆய்வாளரை மிரட்டிய 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் கவிதாஸ் (34). இவருக்கு, அரசலாற்றில் இரண்டு பேர் மணல் எடுப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கவிதாஸ் அங்கு சென்றபோது, இருவர் மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அவர்களை தடுத்தபோது, இருவரும் கவிதாசை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக கட்செவி அஞ்சலில் தகவல் பரவியுள்ளது.
இதையடுத்து, கவிதாஸ் அளித்த புகாரின் பேரில், திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து பொரக்குடியை சேர்ந்த செந்தில் (37), கலைவாணன் (28) இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.