வேதாரண்யம் வேதாமிர்த ஏரியின் வடகரை சாலையை மேம்படுத்த வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் வி.வீரசுந்தரம், செயலாளர் சு. செல்வராசு ஆகியோர் தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:
வேதாமிர்த ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்ததை வரவேற்கிறோம். இந்த பணியோடு ஏரியின் வடகரை, மேல் கரையில் சாலை அமைத்து, மேல்கரை, தென்கரை சந்திப்பில் நீர் வழிப்பாதையில் உள்ள மதகை சீரமைக்க வேண்டும். அத்துடன், ஏரியின் தென்கரையில் இருந்து கடற்கரை பகுதிக்குச் செல்லும் வடிகால் வாய்க்காலை முறையாக அளவீடு செய்து, சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.